அகில இலங்கை ரீதியில் கண்டி மாணவி முதலிடம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அகில இலங்கை ரீதியில் கண்டி மாணவி முதலிடம்!

வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி கண்டி மகாமாயா மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் முதலிடத்தில் இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று (01) தெரிவித்தார்.


பெறுபேறுகளின் பிரகாரம் 245,521 மற்றும் 72.07 சதவீதமானோர் உயர்தரத்துக்கு  பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டில் இது 62.63 சதவீதமாக இருந்தது. 13,588 பேர் அனைத்து பாடங்களிலும் ‘A‘ சித்திப் பெற்றுள்ளனர்.


இந்த பெறுபேறுகளின்படி கண்டி மகாமாயா பாலிகா வித்தியாலய மாணவி ஒருவர் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி ஒருவர் பெற்றுக்கொண்டார். மூன்றாம் இடத்தை கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர் ஒருவர் பெற்றுள்ளார்.


4ம் இடம் பெற்ற இரண்டு மாணவர்கள் உள்ளனர். கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கம்பஹா சிறி குருசா பெண்கள் கல்லூரி. ஆறாவது இடங்கள் நான்கு உள்ளன. அவற்றுள் இரண்டு காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி, குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரி, திருகோணமலை ஸ்ரீ சண்முகம் பெண்கள் கல்லூரி, கொழும்பு மியூசியஸ் கல்லூரி மற்றும் பெண்களுக்கான கண்டி உயர்தரப் பாடசாலை ஆகியன பத்தாவது இடத்தில் உள்ளன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.