சவூதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் நாடு திரும்பினார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சவூதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் நாடு திரும்பினார்!


பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்களாக செல்லும் இலங்கையர்கள் நாளாந்தம் பல துன்பங்களை அனுபவிக்கும், சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.


இதற்கமைய, சவூதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவர், அங்கு வீட்டு உரிமையாளரின் மனைவியினால் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பெண், வீட்டு உரிமையாளரின் மனைவியினால் பெற்றோல் ஊற்றி, தீ வைக்கப்பட்டு எரிகாயங்களுடன் நாடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கொத்தடுவ புதிய நகரைச் சேர்ந்த 45 வயதுடைய நயனா தில்ருக்ஷி என்ற பெண்ணே இந்தச் சம்பவத்துக்கு  முகம் கொடுத்துள்ளார்.


சுமார் 7 மாதங்களுக்கு முன்னர் தான் இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை தான் எதிர்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.