பௌத்த பிக்கு ஒருவரை தாக்கி பணம் கொள்ளை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பௌத்த பிக்கு ஒருவரை தாக்கி பணம் கொள்ளை!


இத்தாலிக்கு செல்லத் தயாராகவிருந்த பௌத்த பிக்கு ஒருவரை தாக்கி அவரிடமிருந்த 112 யூரோக்கள் மற்றும் 7 இலட்சம் ரூபா இலங்கைப் பணம் அடங்கிய சூட்கேஸை கொள்ளையிட்டுச் சென்ற நபரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


தாக்குதலுக்கு இலக்கான  தேரர் இத்தாலியில் வசிப்பதாகவும், இலங்கைக்கு விஜயம் செய்துவிட்டு மீண்டும் இத்தாலி செல்லவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சிலாபம்  பிரதேசத்தில்  உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நபர் ஒருவர் இந்த தேரரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன்  கையிலிருந்த பணம் அடங்கிய பையை பறித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.