லெபனானில் கட்டட இடிபாடுகளில் உயிரிழந்த 65 வயதுடைய இலங்கைப் பெண்ணின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ. பிரேமலதா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை, ஒக்டோபர் 17 ஆம் திகதி, பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம், லெபனானில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பல நபர்களில் ஒரு இலங்கைப் பெண்ணும் இருப்பதாக உறுதிப்படுத்தியது.
லெபனானில் உள்ள மன்சூரியில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒக்டோபர் 16 அன்று இடிந்து விழுந்தது, அதன் மூன்று தளங்கள் மட்டுமே நிற்கின்றன.