கம்பளை பகுதியில் பஸ்ஸை மறித்து சாரதி கடத்தல் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்பளை பகுதியில் பஸ்ஸை மறித்து சாரதி கடத்தல் சம்பவம்!


கம்பளை பகுதியில் இன்று (24) காலை 46 வயதுடைய பஸ் சாரதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மாவெலயிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை வான் ஒன்றில் வந்த சிலர் மறித்து சாரதியை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


குறித்த பஸ் சாரதி வத்தேகம பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.