தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி!


யாழ்ப்பாணம் - கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர். 


மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்ப்பாணம் - கலட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றின் அறையில் வாடகைக்குக் குடியிருந்துள்ளார். 


இந்நிலையில், மாணவி  இன்று (03)  காலை விரிவுரைகளுக்குச் செல்லாமல் தனித்திருந்ததாகவும், சக மாணவிகள் நண்பகல் அளவில் அறைக்குத் திரும்பி வந்த வேளையில் மாணவியின் சடலத்தைக் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.