கண்டி பெரஹரவில் யானை குழப்பமடைந்ததில் பெண்ணொருவர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி பெரஹரவில் யானை குழப்பமடைந்ததில் பெண்ணொருவர் காயம்!


கண்டியில் நேற்று (22) இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பல் பெரஹெராவின் போது விஷ்ணு தேவாலயத்தைச் சேர்ந்த இரண்டு யானைகள் குழப்பமடைந்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.


குறித்த இரண்டு யானைகளும்  குழப்பத்தில்  ஈடுபட்டதையடுத்து, ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சொந்தமான மேலும் இரண்டு யானைகளும் குழம்பின.


இந்நிலையில், தலதா மாளிகைக்குச் சொந்தமான இரண்டு யானைகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு வீதிகளில் ஊர்வலமாகச் சென்றன. மற்றைய இரண்டு யானைகளும் குயின்ஸ் ஹோட்டல் அருகே கட்டப்பட்டிருந்தன.


சம்பவத்தின் போது, பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும், மூவர் அச்சமடைந்து கண்டி ஏரியில் (நுவர வெவ) வீழ்ந்துள்ளனர். பின்னர், மூவரையும்  பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகள் மீட்டனர்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.