மசாஜ் நிலையத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மசாஜ் நிலையத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!


பொத்துவில் சுற்றுலாப் பிரதேசத்திலுள்ள மசாஜ் நிலையம் ஒன்றுக்கு மசாஜ் செய்வதற்காகச் சென்ற 23 வயதுடைய இஸ்ரேலிய யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட குறித்த யுவதி பொத்துவில் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகள் நடத்தப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மசாஜ் நிலையத்தில் சிகிச்சையாளராக கடமையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.