இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடைநீக்கம் தொடர்பில் மீள ஆராய வேண்டும்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடைநீக்கம் தொடர்பில் மீள ஆராய வேண்டும்?


ஐந்து இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கம் குறித்து மீள ஆராயப் போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து ஐந்து இஸ்லாமிய அமைப்புகளிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீக்கியுள்ளார்.


எனினும் கத்தோலிக்க திருச்சபை அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இதனை கண்டித்துள்ளனர்.


இந்த சூழ்நிலையில் தடை நீக்கப்பட்டமை குறித்து அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தற்போதைக்கு இது குறித்து மீள்பரிசீலனை செய்யும் திட்டம் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.


புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்புடன் தொடர்புபட்டவர்களும் இணைந்து தடைகளை நீக்கும் முடிவை எடுத்தனர் என தெரிவித்துள்ள அவர் விமர்சனங்கள் உள்ளதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம், எனினும் இதனை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே செய்துள்ளோம், அரசியல்வாதிகள் எவரும் இதில் தொடர்புபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து நாங்கள் மீள்பரிசீலனை செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எனினும் தடை நீக்கப்பட்ட அமைப்புகளின் நடவடிக்கைகளை உரிய அமைப்புகள் தொடர்ந்தும் கண்காணிக்கும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கண்காணிப்பு தொடரும் அவர்கள் பிழை செய்தால் தடை மீண்டும் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.