மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிச்சூடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிச்சூடு!


திருகோணமலையின் குச்சவெளியிலிருந்து இறக்ககண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள்மீது  நீர் வழங்கும் கால்வாய்க்கு ஒன்றுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்த ஒருவரால்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


17 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்களே காலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் குறித்தோ இதன் பின்னணிகள் தொடர்பிலோ இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்


குச்சவெளி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.