17 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்களே காலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் குறித்தோ இதன் பின்னணிகள் தொடர்பிலோ இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்
குச்சவெளி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.