மக்காவுக்கான புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்டிருந்த இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்தனர்.
கொலன்னாவ பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்ததாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் உறுதி செய்துள்ளது.
அதேநேரம், கொழும்பு 14 ஐ சேர்ந்த ஆண் ஒருவர், மதீனா நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது.