திருமண வீட்டுக்கு செல்ல விடாமல் தடுத்த 13 வயது மாணவி தற்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமண வீட்டுக்கு செல்ல விடாமல் தடுத்த 13 வயது மாணவி தற்கொலை!


திருமண வீட்டிற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய 13 வயது மாணவியின் சடலம் குளியலறையில் இருந்து மீட்கப்பட்டதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்த பெண், அகலவத்தை பொலிஸ் எல்லைக்குட்பட்ட வயங்கல்ல பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி என்பதுடன், அளுத்கம, அட்டாலுகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றார்.


விடுதியில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பிய மாணவி, எதிர்வரும் நாளில் நடைபெறவுள்ள திருமணத்தில் தானும் கலந்துகொள்ள விரும்புவதாக தனது தாயாரிடம் கூறியுள்ளார். அதில் மகள் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அன்றைய தினம் விடுதிக்கு சென்று பாடசாலைக்கு தயாராகும் படியும் மகளை தாய் எச்சரித்துள்ளார்.


அன்றிரவு, மாணவி கழிவறைக்குச் சென்று நீண்ட நேரம் திரும்பாததால் சென்றதால், அக்கம் பக்கத்தினர் குளியலறையின் கதவை உடைத்து பார்த்தபோது, ​​மாணவி சடலமாகக் கிடந்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.