இலவச சுகாதார துறைக்கு நிதி பிரச்சினை; நிவர்த்திக்க முடியாவிட்டால் பதவி துறப்பேன்! -கெஹெலிய

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலவச சுகாதார துறைக்கு நிதி பிரச்சினை; நிவர்த்திக்க முடியாவிட்டால் பதவி துறப்பேன்! -கெஹெலிய


தாம் பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.


இலவச சுகாதார துறைக்கு வழங்கப்படும் நிதி தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதனை நிவர்த்திக்க முடியாவிட்டால் தொடர்ந்தும் பதவி வகிக்க தாம் தயார் இல்லை என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


இதேவேளை, பிரச்சினைக்குரிய ஒளடதமாக கருதப்படும் மயக்க மருந்து குழந்தைகளுக்கு இதுவரை உட்செலுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.


குறித்த மயக்க மருந்தானது வயது வந்தவர்களுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.


பேராதனை போதனா மற்றும் பேராதனை பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய இந்திய தயாரிப்பு மயக்க மருந்தினால் 04 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.


இந்நிலையிலேயே குறித்த மயக்க மருந்து குழந்தைகளுக்கு இதுவரை உட்செலுத்தப்படவில்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.