வைத்தியரை தாக்கிய வைத்தியர்; அதே வைத்தியசாலையில் அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வைத்தியரை தாக்கிய வைத்தியர்; அதே வைத்தியசாலையில் அனுமதி!


அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர், மற்றுமொரு வைத்தியரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.


இதனால் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், அவர் அதே வைத்தியசாலையில் சிகிச்சைகக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


காயமடைந்த மருத்துவர், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுர மருத்துவமனையின் கிளை அதிகாரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று காலை தனது அலுவலகத்திற்கு வருகை தந்த, வைத்தியர் ஒருவர் தன்னை தாக்கி காயங்களை ஏற்படுத்தியதாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.


உத்தியோகபூர்வ விடயம் தொடர்பாக இரண்டு வைத்தியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.