சாய்ந்தமருதில் மாபெரும் இரத்ததான முகாம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாய்ந்தமருதில் மாபெரும் இரத்ததான முகாம்!


சாய்ந்தமருது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக சாய்ந்தமருதில்  "உதிரம் கொடுத்து உயிர்காப்போம்" எனும் தொனிப்பொருளில் யுஎஸ்எப் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் (10) சனிக்கிழமை காலை 8.30 முதல் மாலை 3 வரை  சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையம் (SLYC) இடம்பெறும். 

" எவரொருவர் ஒரு மனிதனை வாழ வைக்கின்றாரோ அவர் யாவரையும் வாழ வைத்தவர் ஆவார்"என்ற அல்குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் இதில் கலந்து கொண்டு இரத்தானங்களை வழங்க முன்வருமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆண், பெண் இருபாலாருக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் வாகன வசதி இல்லாதவருக்கு வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களை
அ.க. அன்வர்- 0776655606, எ.எம்.சஹான்-0752515453, ஏ.ஆர்.எம்.ஜப்ரான்-0757788902, எம்.எம்.றக்ஸான்- 0767000661ஆகியோருடன் அழைத்துப் பெற்றுக்கொள்ளலாம்.

பதிவுகளுக்கு கீழுள்ள லிங்கினை அழுத்தி உங்களது வரவினை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்


-எம்.எஸ்.எம்.ஸாகிர்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.