விசா மோசடி; கண்டி மாவட்ட எம்.பியின் சகோதரர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விசா மோசடி; கண்டி மாவட்ட எம்.பியின் சகோதரர் கைது!


ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீமினின் இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.


டுபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல்வேறு நபர்களிடம் இருந்து நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைத்த மூன்று முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.


டுபாயில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் ​கூறி, இரண்டரை இலட்சம் ரூபாய், ஒரு இலட்சம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் என மூவரிடமும் நிதியைப் பெற்றுள்ளார். இந்நிலையில் மோசடிக்கு முகங் கொடுத்தவர்கள் கலகெதர மற்றும் அக்குறணை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


அவர்கள் மூவரும் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டார். இந்த மூவருக்கும் போலியான டுபாய் விசாக்களை வழங்கியுள்ளார்.


இது தொடர்பில் டுபாய் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு தேடியறிந்த போது அந்த மூன்று விசாக்களும் போலியானவை என்பதும் தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 


ஷேன் செனவிரத்ன


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.