டைட்டானிக் கப்பல் பார்வையிடச்சென்ற ஐவரும் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டைட்டானிக் கப்பல் பார்வையிடச்சென்ற ஐவரும் பலி!


டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்று காணாமல் போனதாக கூறப்பட்ட, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 05 பயணிகளும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 1,600 அடி பிரதேசத்தில் கப்பலின் ஐந்து பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதை அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள் ஒரு 'பேரழிவு வெடிப்பு' இடம்பெற்றதை உறுதிச்செய்வதாக அமெரிக்க கரையோர காவல்படையின் அதிகாரி ஒருவர் செய்தி மாநாடு ஒன்றில் கூறியுள்ளார்.

டைட்டன் நீர்மூழ்கி கப்பல், கடலின் மேற்பரப்புடனான தொடர்பை இழந்த சிறிது நேரத்திலேயே அமெரிக்க கடற்படை 'ஒரு வெடிப்புடன் ஒத்துப்போகும் சத்தத்தை' கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்மூழ்கி கப்பல், கடந்த ஞாயிற்றுக்கிழமை டைட்டானிக் கப்பலின் சிதைவை ஆராய புறப்பட்ட நிலையில் காணாமல் போனது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.