கண்டி - அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த 35 வயது பெண் வெட்டிக் கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி - அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த 35 வயது பெண் வெட்டிக் கொலை!


நேற்றிரவு (01) கெக்கிராவ, செக்குபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் 35 வயதுடைய பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இவ்வாறு கொலை செய்ப்பட்டவர் அக்குறணை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த பெண் தனது கணவரினால் வீட்டின் அறையொன்றில் சடலமாக மீட்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசித்து வந்ததாகவும், ஆனால் நேற்றிரவு தனி அறையில் உறங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இன்று அதிகாலை அப்பெண் அறைக்குள் இறந்து கிடப்பதைக் கண்டு பொலிசாருக்குத் தகவல் கொடுத்தார்.


மரணத்திற்கான காரணம் அல்லது தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து எந்த தகவலும் கண்டறியப்படவில்லை, கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.