advertise here on top
Join yazhnews Whatsapp Community

நாட்டில் பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு முன்கூட்டியே எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (07) காலை 9:00 மணி முதல் நாளை (08) காலை 9:00 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் நாகொட, எல்பிட்டிய, பத்தேகம மற்றும் யக்கலமுல்ல பிரதேசங்களிலும் பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேசங்களிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, ரம்புக்கன, தெரணியகல, மாவனெல்ல, கேகாலை, கலிகமுவ ஆகிய பகுதிகளுக்கும் குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம, மாவத்தகம, அலவ்வ பிரதேசங்களுக்கும் மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.