புத்தாண்டை முன்னிட்டு விசேட பயணிகள் போக்குவரத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தாண்டை முன்னிட்டு விசேட பயணிகள் போக்குவரத்து!

சிங்கள இந்து புத்தாண்டை முன்னிட்டு விசேட பயணிகள் போக்குவரத்து சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கொழும்பு மத்திய பஸ் நிலையம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பிரதான நகரங்களில் இருந்து விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேவைக்கு ஏற்ப தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

சில விசேட ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.