இலங்கையில் இணைய மோசடியில் ஈடுபட்ட 39 சீனர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இணைய மோசடியில் ஈடுபட்ட 39 சீனர்கள் கைது!

இணையத்தளத்தில் இருந்தும் பல்வேறு நாடுகளில் மக்களை ஏமாற்றிய சந்தேகத்தின் பேரில் 39 சீன பிரஜைகள் அடங்கிய குழுவொன்று அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் அளுத்கம, களுஅமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்து இந்த இணைய மோசடிகளில் ஈடுபட்டு பெரும் தொகையை மோசடி செய்து வந்துள்ளனர்.


தூதரகங்களில் முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து பொலிசார் விசாரணை நடத்தி சீன பிரஜைகளை இன்று (01) கைது செய்தனர்.


மேலும் பல உயர் ரக ஸ்மார்ட்போன்கள், கணனிகள் மற்றும் பணத்தை ஆதாரமாக கைப்பற்றிய பொலிசார், 39 சந்தேக நபர்களையும் தனியார் பஸ்ஸில் அளுத்கம பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.