பல மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

பல மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது!


பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலையின் முன்னாள் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பல மாணவர்களை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் பலாங்கொடை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்நிலையில், குறித்த பாடசாலையின் அதிபர் அண்மையில் அந்த பகுதியில் உள்ள மற்றுமொரு பாடசாலைக்கு ஆசிரியராக கடமையில் அமர்த்தப்பட்டார். அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.


இதனையடுத்து, அவர் மீதான முறைப்பாடு ஆராயப்பட்டு, இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட அதிபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.