பொலிஸாரின் கண்ணீர் புகை தாக்குதலில் சிக்கிய பாடசாலை மாணவர்கள்! (வீடியோ)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸாரின் கண்ணீர் புகை தாக்குதலில் சிக்கிய பாடசாலை மாணவர்கள்! (வீடியோ)


கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை தாக்குதலில் சிக்கி பல பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் நேற்றைய தினம் (07) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைப்பதற்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதை எதிர்த்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளது.


பாடசாலைகளால் சூழப்பட்ட கேம்பிரிட்ஜ் பிளேஸுக்குள் இன்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்ததை அடுத்து, அவர்களை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை போலீசார் வீசினர்.


எவ்வாறாயினும், கொழும்பு கேம்பிரிட்ஜ் பிளேஸுக்கு அருகில் பொலிஸாரின் கண்ணீர்ப்புகைத் தாக்குதலுக்கு பல இளம் பாடசாலை மாணவர்கள் உள்ளாகினர்.


கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதலுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்கள் இருமல் மற்றும் கடுமையான அசௌகரியத்துடன் காணப்பட்டதையடுத்து, அவர்கள் மீண்டும் அருகிலுள்ள பாடசாலைக்குள் கொண்டு செல்லப்பட்டனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.