இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி!


நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சு தாமதம் காரணமாக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.


ஒக்லேண்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மெதுவான ஓவர் வீதத்தை பேணியதற்காக இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இலங்கை அணியினர், தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் இலக்கை விட ஒரு ஓவர் குறைவாக வீசியிருந்ததாக ஐ.சி.சி போட்டி மத்தியஸ்தர் ஜெஃப் குரோவினால் தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


குறைந்தபட்ச ஓவர் வீத குற்றங்கள் தொடர்பான ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான விதி 2.22 இன் படி, தாமதமான ஒவ்வொரு ஓவருக்கும், பந்துவீசத் தவறிய வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.


மேலும், ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ண சூப்பர் லீக் போட்டி நிபந்தனைகளின் பிரிவு 16.12.2 இன் படி, ஒவ்வொரு தாமதமான ஓவருக்கும் ஒரு புள்ளி குறைக்கப்படுகிறது.


இதன் விளைவாக, சுப்பர் லீக் தொடரின்போது இலங்கை தனது புள்ளிகள் கணக்கில் இருந்து ஒரு புள்ளியை இழக்கும்.


இந்தநிலையில், தாமதமான பந்துவீச்சு வீதத்தை பேணியதாக இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதால் முறையான விசாரணைக்கு அவசியமில்லையென சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.