வரிச் செலுத்தாதவர்களை இனம்கண்டு துரித நடவடிக்கை எடுக்க அமைச்சர் பணிப்புரை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வரிச் செலுத்தாதவர்களை இனம்கண்டு துரித நடவடிக்கை எடுக்க அமைச்சர் பணிப்புரை!


வருமான வரி செலுத்த தவறிய பல்வேறு தொழில்கள் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை அடையாளம் காண துரித நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார். 


நாடு அரசாங்க வருமானம் தொடர்பில் கவனம் செலுத்தும் இவ்வேளையில், வரிகளை விதித்து வருமானம் ஈட்டுவது மற்றும் அவ்வாறு வரி செலுத்தத் தவறுபவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


இன்று (01) நிதியமைச்சு வளாகத்தில் இடம்பெற்ற உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.


வரி வசூல், காலிப்பணியிடங்கள் போன்ற பல விஷயங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.