![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqIvmDGxG-JOD37M9ZbxqPJwvKNNV88CvUZ0-p9Yy9YjcOmf3eaatST5czUQYACQyle1iDy0UORfNQNH2dbKoNlfWD3Q5stR-vc2dvO-wu5JNtEaZcTo7UPY_saK2dCG_mRyagyGXwTTtmobKrD1mf8g3cr3Eeiih6DIKP4ZZu8VT_NhzqGB6ihZMi/s16000/ds.jpeg)
கண்டி - அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய பெண்ணின் சடலம், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள வயல் நிலத்தின் சதுப்பு நிலத்தில் இருந்து கிராம மக்களால் சனிக்கிழமை (11) மீட்கப்பட்டது. குறித்த பெண்ணின் கணவர் இறுதிச் சடங்கொன்றில் கலந்துகொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த வேளையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவரின் வீட்டிலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சந்தேகநபரின் வீட்டிற்குச் சென்ற பொலிஸார், பொலிஸ் நாயின் உதவியுடன் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
38 வயதுடைய சந்தேக நபர், முன்னர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்தமையினால், தற்போது இலகுரக கடமைகளில் இராணுவத்தில் பணிபுரிவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)