108 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜனாதிபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

108 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜனாதிபதி!


2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான 108 வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுவிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஈஸ்டர் தாக்குதல்களின் போது கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அல்லது காயமடைந்தவர்களின் உறவினர்கள் இந்த வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.


கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வாவினால் இன்று (01) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 


தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இரண்டாவது பிரதிவாதியான ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில் அரசியலமைப்பின் 35(1) பிரிவின்படி விடுதலைக்கு தகுதியானவர் என்று குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.