![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv9uTj036D_VXg6QXvQdiXCxqRYpW2-jnwAIBuOg5ZRAlhsWKXSSI2hy_dIH2ZJohiCQVI5wbaNIa7iyjs5jDElRjSkcnoe3ms8Z8HZs75pDYD1--K4LaLMDCEfPc5FjeCnypbZGyjP5ZWBvON941rAtpOLLbVoUYkYKo5YejNCNxulCMd6nPtI8iO/s16000/Ranil%20Wickremesinghe.jpg)
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான 108 வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுவிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்களின் போது கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அல்லது காயமடைந்தவர்களின் உறவினர்கள் இந்த வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வாவினால் இன்று (01) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இரண்டாவது பிரதிவாதியான ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில் அரசியலமைப்பின் 35(1) பிரிவின்படி விடுதலைக்கு தகுதியானவர் என்று குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)