உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் விடுதலை!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் விடுதலை!

ஸ்ரீலங்கா ஜமாத் இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் கொழும்பு நீதவானால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​அவர் மீதான சகல குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெறுமாறு பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. அதன்படி அவர் இன்று நீதவானால் விடுதலை செய்யப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

தன்னைக் கைது செய்து, காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்றும், தனது அடிப்படை உரிமை மீறல் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இடைக்கால நடவடிக்கையாக, அவர் ஜனவரி 2022 இல் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.