உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைப்பு??

advertise here on top
Join yazhnews Whatsapp Community

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைப்பு??

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்குத் தேவையான பணத்தை விடுவிக்க முடியாது என நிதியமைச்சு எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்குப் பணம் ஒதுக்கப்பட்ட போதிலும் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு அதற்கான பணத்தை விடுவிக்க முடியாது என பிரேரணையின் ஊடாக அறிவிக்கப்பட உள்ளது.

அந்த அறிவித்தலின் அடிப்படையில், பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தேர்தலை சில மாதங்களுக்கு ஒத்திவைக்க, வரும் 10ம் திகதி, உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க, அரசு தயாராகி வருகிறது.

கடந்த வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு அந்தப் பணத்தை விடுவிக்க முடியாது என நிதியமைச்சும் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.