![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-CA_jf0XWC_tGHhH7mXTFyDY3w3kCnysc-IuZUg6yCUTvawz6MNVxw57wGv35lfVmeAQ07FydA2M3bRK8TjGSqf1MT-ZKNG4CHBjGTT-Pp386kic8Oy9Ddi-E0AtL1Op1XZ0pO_bhYKt-i4SGnsTL03FfW0pwuV9DydRUEvpFgaeQtxJJ_EeUXgls/s16000/gold.webp)
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் (24) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 663,048 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
இந்நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 187,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 171,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,750 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.