டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை!


வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை விரைவில் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.


ஓமானுக்கு சென்றுள்ள அமைச்சர் மனுஷ நாணயக்கார அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனை தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை டிஜிட்டல் மயப்படுத்துமாறு ஓமான் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இந்நிலையில், டிஜிட்டல் மயமாக்குவதற்கான பணிகள் விரைந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.