தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்து; ஒருவர் பலி மற்றும் வெளிநாட்டவர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்து; ஒருவர் பலி மற்றும் வெளிநாட்டவர் காயம்!


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வெளிநாட்டவரான பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.


விபத்தின் போது காரில் பயணித்த ரஷ்ய பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ரஷ்ய பிரஜையை காலியில் இருந்து விமான நிலையத்தில் இறக்கி விடுவதற்காக காரின் சாரதி சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


விபத்து தொடர்பான விசாரணைகளை அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.