வீடு புகுந்து தம்பதியர் வெட்டி படுகொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீடு புகுந்து தம்பதியர் வெட்டி படுகொலை!

அம்பலாந்தோட்டை பொலன ருஹுனு ரிதிகம 3ஆம் மைல் பகுதியில் வீடொன்றினுள் தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் மைத்துனர் சந்தேகத்தின் பேரில் அம்பலாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் வீட்டுக்குள் புகுந்து கோடாரி மற்றும் கத்தியால் தம்பதியை தாக்கி இரட்டை கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் 61 வயதுடைய ஆண் மற்றும் 56 வயதுடைய மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக நிலத்தகராறு காரணமாக இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.