அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க முன்னாள் ஜனாதிபதி விண்ணப்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க முன்னாள் ஜனாதிபதி விண்ணப்பம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுப்பதற்கு விண்ணப்பித்துள்ளார்.

முன்னதாக 2019ஆம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாபய ராஜபக்ஷ தமது அமெரிக்க குடியுரிமையை துறந்தார்.

இந்நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என்று கூறப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேறியபோது, எந்த நாடும் அவருக்கு புகலிடம் வழங்கவில்லை.

இதனையடுத்தே தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷ விண்ணப்பித்துள்ளதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பினார்.

இந்நிலையில் மீண்டும் அமெரிக்க குடியுரிமைக்கான கோரிக்கையை அமெரிக்க அரசாங்கம் இன்னும் பரிசீலிக்கவில்லை என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது துபாயில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 06ஆம் திகதியன்று இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.