![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3vwhGQCMv66xvCy2cnXlKL21sRGRVStCp1kifxvNRsEKltz9h5CMgCOuK2mUasdLA4AmpZ6j_Tt4ay3NS7xBp_qb4vw1KKgRAoc3V3IAmjD8wSE9fQZ_2tO-Uh6K009Mrsz6ztGaQwZ8FlakcHu05ahDO1BRyYFk43AZ_DS27tbbvsuqwI52euRvu/s16000/P_20160819_122203_1.jpg)
தற்காலிக ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வ ஓட்டுநர் உரிம அட்டைகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள் தபால் மூலம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சுமார் 600,000 பேருக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், உரிம அட்டை விநியோகம் வாரங்களுக்குள் முடிக்கப்படும் என்றார்.
ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதற்காக ஏற்கனவே 500,000 அட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாகவும், மேலும் 500,000 அட்டைகள் விரைவில் நாட்டை வந்தடையும் என்றும் அவர் மேலும் கூறினார்.
உத்தியோகபூர்வ உரிமங்களை அச்சிடுவதற்கு கார்டுகள் இல்லாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தற்காலிக உரிமங்களை வழங்கியிருந்தது. (யாழ் நியூஸ்)