தற்காலிக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போருக்கு அட்டைகள் வழங்கும் திகதி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்காலிக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போருக்கு அட்டைகள் வழங்கும் திகதி அறிவிப்பு!


தற்காலிக ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வ ஓட்டுநர் உரிம அட்டைகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள் தபால் மூலம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.


சுமார் 600,000 பேருக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், உரிம அட்டை விநியோகம் வாரங்களுக்குள் முடிக்கப்படும் என்றார். 


ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதற்காக ஏற்கனவே 500,000 அட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாகவும், மேலும் 500,000 அட்டைகள் விரைவில் நாட்டை வந்தடையும் என்றும் அவர் மேலும் கூறினார்.


உத்தியோகபூர்வ உரிமங்களை அச்சிடுவதற்கு கார்டுகள் இல்லாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தற்காலிக உரிமங்களை வழங்கியிருந்தது.  (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.