கம்மன்பிலவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிக நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்மன்பிலவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிக நீக்கம்!


நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாடுகளுக்கான பயணத்தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே உத்தரவிட்டுள்ளார்.


எதிர்வரும் டிசெம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்தியாவில் இடம்பெறவுள்ள மதவழிபாட்டு நிகழ்வில் பங்கேற்பதற்காக அவருக்கான பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பினை குடிவரவு குடியல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு மேல்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


நிதி மோசடி வழக்கொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கு வெளிநாடுகளுக்கு செல்ல பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.