இரண்டு மாடி வீடொன்றின் மீது சரிந்த விழுந்த மண் மேடு - இருவர் பலி (PHOTOS)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரண்டு மாடி வீடொன்றின் மீது சரிந்த விழுந்த மண் மேடு - இருவர் பலி (PHOTOS)

நேற்று (14) வரகாபொல, அகுருவெல்ல தும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இருந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் மண்மேட்டின் கீழ் புதைந்த நிலையில் காணப்பட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களை மீட்க பாதுகாப்புப் படையினரும், அப்பகுதி மக்களும் கடுமையாகப் போராடினர். காயமடைந்த தந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தாய் மற்றும் மகனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இன்று (15) காலை வரை மீட்புப் பணிகள் தொடர்ந்தன.

வீட்டில் இருந்த இன்னொரு குழந்தை, புலமைபரிசில் மேலதிக வகுப்புக்கு சென்றிருந்ததால் விபத்தில் சிக்கவில்லை. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.