வங்காள விரிகுடா சூறாவளி மேலும் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வங்காள விரிகுடா சூறாவளி மேலும் அதிகரிப்பு!

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று காலை கிழக்கு மத்திய வங்கக்கடல் அருகே நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் மத்திய வங்கக்கடல் அருகே புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிமீ வேகத்தில் வீசும் என்றும், 12 முதல் 20 வடக்கு அட்சரேகை மற்றும் 85 மற்றும் 100 கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் அதிகரித்து, அந்த கடல் பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய கரடுமுரடான அல்லது மிகக் கொந்தளிப்பாக இருக்கும். மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12 மற்றும் 20 வடக்கு அட்சரேகை மற்றும் 85 மற்றும் 100 கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட கடற்பரப்புகளில் தற்போது மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் உடனடியாக நிலத்திற்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.