![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1NzEz6SyfaZk0kIdpjbxyMlkNLWfQfvY7qHXAuAXXiyzcIi-UtIX_9GQzQK9nLkYIEFGAvVHWZlgBAPpgjdShBNWkrN7vnDjwFp5AFGvgX5s2QR_NKze0MZi-MkPBUkYWx_9IyEo3VzApGGvgscGaCak6XvQlyIFArc-scqgnCpqMvuMZzY1DOXCZZA/s16000/B636F730-5748-4CE8-8AB0-FB93288019CD.jpeg)
இதன்படி, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி நிதியமைச்சர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இக்கலந்துரையாடலில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க, நாட்டின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக கச்சா எண்ணெயைப் பெறுவதற்கான வர்த்தகக் கடன் வசதியை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.
தமக்கு எவ்வளவு கச்சா எண்ணெய் தேவை என்றும் கடன் தொகையை 3 அல்லது 6 மாதங்களுக்குள் ரஷ்யாவிற்கு திருப்பி செலுத்த வேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)