advertise here on top
Join yazhnews Whatsapp Community

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு புதிய தலைமைத்துவ பதவி!

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சட்டமன்ற உப குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் நேற்று (07) இடம்பெற்றதுடன் பாராளுமன்ற உறுப்பினரின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் பரிந்துரைத்துள்ளதுடன் அதனை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய ஜனாதிபதி முன்னிலையில், பொது நிர்வாகம், சுகாதாரக் கொள்கைகள், கல்விக் கொள்கைகள், மீன்பிடி மற்றும் உணவுக் கொள்கைகள், மின்சாரம் மற்றும் எரிசக்தி கொள்கைகள், காலநிலை மாற்றக் கொள்கைகள் மற்றும் தொழில்முனைவோர் கொள்கைகள் தொடர்பான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெறுவதற்காக உப குழுக்களைக் கூட்டுவதற்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.