இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வரி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வரி!

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) இன்று (01 ஒக்டோபர்) முதல் நடைமுறைக்கு வருகின்றது. 

இம்மாதத் தொடக்கத்தில், சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச்சட்டம் திருத்தங்கள் மற்றும் 81 பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த வாரம் (21) சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச்சட்டமூலத்தின் சான்றிதழை அங்கீகரித்தார்.

அரசாங்க வருவாயை உயர்த்துவதற்கும், கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ஒரு நடவடிக்கையாக 2022 வரவு செலவு திட்டத்தில் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறிமுகப்படுத்தியது.

இந்த வரி இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மீது ஆண்டு வருமானம் ரூ. 120 மில்லியன் இல் 2.5% ஆக அமையும். இந்த வரி மூலம் ஆண்டுக்கு எதிர்பார்க்கப்படும் வருவாய் ரூ. 140 பில்லியன் ஆகும். 

2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமாக இந்த சட்டமூலம் அமுலுக்கு வரும் என இலங்கை நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.