![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnReNinDLIOj5dbPmpt6nNv8I0nr0lXsdYq-tfSmP-OjZOU2Xa1clUTg88nEdF9hS7ldHTDE9OFInY7uqxrwqFx9RnfIWvlQGvxzlvFSd-d1Tmj1l_36VLHcU44V4f5-OF67Mou49BqgBFnPgBrM5cg6Obyj0VMDQpWQ_8waBWMqK7KY-CJsYiQJWOzg/s16000/17D964E6-B2F6-4574-9231-D3383713A01A.jpeg)
"2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு வருமானச் சட்டத்தின் விதிகளின்படி, இரத்தினக்கல் ஏற்றுமதியின் வருமானத்திற்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். நாட்டில் தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழ்நிலை காரணமாக, மேற்குறிப்பிட்ட உள்நாட்டு வருவாய் திருத்த மசோதாவின் விதிகளின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு, அனைவருக்கும் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்தில் 30% வருமான வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் 3,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இரத்தினக்கற் பொதிகளை ஒன்லைன் முறையின் ஊடாக ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
( பேருவளை ஹில்மி )