பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நேற்று (23) இரவு 34 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் பொருபனை பாலத்திற்கு அருகில் காத்திருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் கைப்பற்றியுள்ளனர்.
பிடிபட்ட சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)