34 வயது பெ‌ண் ஒருவ‌ர் கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

34 வயது பெ‌ண் ஒருவ‌ர் கொலை!

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நேற்று (23) இரவு 34 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

படுகாயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண்ணின் கணவரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் பொருபனை பாலத்திற்கு அருகில் காத்திருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் தாக்கப்பட்டுள்ளனர்.

 தாக்குதலைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் கைப்பற்றியுள்ளனர். 

பிடிபட்ட சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.