மின்கட்டண உயர்வு தொடர்பிலான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்கட்டண உயர்வு தொடர்பிலான அறிவிப்பு!


அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டண விகிதங்களை நாளை (09) அறிவிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணத்தில் இருந்து நிவாரணம் வழங்குவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு திறைசேரியிடம் 65 மில்லியன் ரூபா கோரியதாகவும், அதற்கான தொகை இதுவரை கிடைக்கவில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன. 

 மின் கட்டணம் 50 முதல் 75 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள விலைவாசி உயர்வு திகதி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.