சுங்க அதிகாரிகள் என்று தம்மை கூறிய சென்னை விமான நிலையத்தில் தங்க நகைகளை திருடிய இரு இலங்கையர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுங்க அதிகாரிகள் என்று தம்மை கூறிய சென்னை விமான நிலையத்தில் தங்க நகைகளை திருடிய இரு இலங்கையர்கள்!

சுங்க அதிகாரிகளாக காட்டிக்கொண்டு இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

47 வயதான நதிஷா ரோஷினி, கடந்த திங்கட்கிழமை இலங்கையில் இருந்து விமானத்தில் வந்ததாக சென்னை பொலிசார் தெரிவித்தனர்.

இலங்கையைச் சேர்ந்த முகமது நஜ்மின் (31) மற்றும் செல்லையா அரவிந்தன் (40), என அடையாளம் காணப்பட்ட இரு குற்றவாளிகள், குறித்த நபரை விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி, தங்களை சுங்க அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தினர்.

அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நகைகளை எடுத்துச் செல்வதாக கூறி, நகை மற்றும் வளையல்களை இருவரும் எடுத்துச் சென்றனர். சந்தேகமடைந்த அவர், சுங்கத்துறைக்கு சென்று அவர்கள் மீது புகார் அளித்தார். பின்னர், பொலிஸ் இலும் புகார் அளித்தார்.  

இதனை தொடர்ந்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.