வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் மீண்டும் வெளிநாடு செல்ல டாலர்கள் அனுப்பியிருக்க வேண்டுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் மீண்டும் வெளிநாடு செல்ல டாலர்கள் அனுப்பியிருக்க வேண்டுமா?

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு வழங்குவதில் பரிசீலிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு திரும்பி வந்து வேலைக்காக மீண்டும் வெளிநாடு செல்லும் போது செய்யப்படும் பதிவு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருந்த போது, சட்டரீதியான முறையில் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள டொலர்களின் எண்ணிக்கை தொடர்பில் கண்டறியப்படவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கணிசமான அளவு பணத்தை அனுப்பியுள்ளவர்களுக்கு மாத்திரம் மீண்டும் வெளிநாடு செல்லக்கூடிய வகையில் சட்டம் இயற்றப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் வேலைகளுக்காக வெளிநாடு செல்லும் யுவதிகளுக்கு விமான டிக்கெட் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.