ஹட்டன் பிரதான பஸ் நிலையத்தில் இன்று (18) கைவிடப்பட்ட சூட்கேஸ் ஒன்றினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மாலை பேருந்து நிலையத்தில் உரிமையாளர் இல்லாமல் சூட்கேஸ் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரமாக இந்த சூட்கேஸ் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர், பஸ் தரிப்பிடத்தில் இருந்த பஸ்கள் அகற்றப்பட்டு அங்குள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.
இவ்வாறு கைவிடப்பட்ட சூட்கேஸ் என்னவென்று விசாரணை செய்ய அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
அந்த சூட்கேஸ் இல் உடைகள் மற்றும் பிற பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் ஒரு நபர் தோன்றி, தவறுதலாக தனது சூட்கேஸ் இணை விட்டுச் சென்றதாகக் கூறினார். (யாழ் நியூஸ்)