
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி எரிவாயு மற்றும் எரிபொருள் இருப்புக்கள் ஜூலை 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்குள் இலங்கையை வந்தடையும் என்றார்.
எதிர்க்கட்சியினரால் பரப்பப்படும் தவறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்குள் நிதித் திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெருக்கடியைச் சமாளிக்கவும் தீர்க்கவும் நிறைய திட்டமிடல் மற்றும் கடின உழைப்புக்குப் பிறகு, முடிவுகள் இப்போது தெளிவாகத் தெரிகிறது என்றார்.
நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
1. அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு பெறப்பட்டுள்ளது.
2. இந்தியாவிலிருந்து 44,000 மெட்ரிக் டன் உரம் முதல் சரக்கு நாளை வர உள்ளது.
3. ஜூலை 12 முதல் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும்.
4. உணவுப் பற்றாக்குறையைத் தடுக்க பல திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது
5. அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மேலும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
