நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற பசில் - விமான நிலைய அதிகாரிகள் செய்தது இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற பசில் - விமான நிலைய அதிகாரிகள் செய்தது இது தான்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (11) இரவு நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கட்டுநாக விமான நிலையத்தில் பட்டுப்பாதை (சில்ல் ரூட்) (Silk Route/CIP) புறப்படும் முனையத்தை வந்தடைந்ததை அடுத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தமது கடமைகளில் இருந்து விலக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முடியாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை பட்டுப்பாதை பயணிகள் அனுமதி நடவடிக்கைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.