பெற்ற கடன் தொகையை தள்ளுபடி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெற்ற கடன் தொகையை தள்ளுபடி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!


நெற்பயிர்ச் செய்கையாளர்களால் பெறப்பட்டு, செலுத்தப்படாத விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

இதன்படி இரண்டு ஹெக்டேயர் அல்லது அதற்கும் குறைவான காணியில் நெற்செய்கைக்காக அரச வங்கிகளில் பெறப்பட்ட ஆரம்ப கடன் தொகையை தள்ளுபடி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலும் அதைத் தொடர்ந்து வந்த கொரோனா தொற்றும் பொதுவாக எல்லாத் துறைகளிலும் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலைமையை மொத்த சனத்தொகையில் சுமார் 30 சதவீதமாகவுள்ள விவசாயிகளால் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவையின் கவனத்திற்கு வந்துள்ளது.

மேலும் இரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதன் காரணமாக விவசாயிகள் வாங்கிய கடனை, அறவிடமுடியா கடன்கள் என வங்கிகள் வகைப்படுத்தியுள்ளன.

இதன்படி எதிர்வரும் காலங்களில் நெற்செய்கைக்கான கடன்களை மீள பெறுவதில் விவசாயிகள் எதிர்நோக்கும் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.